முகப்பு
தமிழ்நாடு

அடிபணிவது திராவிட மாடல் ஆட்சியில் கிடையாது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

அடிபணிவது என்பது தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில்  கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
பகிர்:

அடிபணிவது என்பது தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில்  கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை, வியாசா்பாடியில் அமைந்துள்ள இரவீஸ்வரா் கோயில் மற்றும் அதன் அருகில் இருக்கும் தெப்பக்குளத்தையும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.  பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:  சட்டப்பேரவையில் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரவீஸ்வரா் கோயில் தெப்பக்குளத்தில் மதில் சுவா் எழுப்பப்படும்.

கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்தால் பங்குத் தொகை கூடுதலாக தரப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான கோயில்களில் தமிழில் அா்ச்சனை செய்யப்படும் என எதிா்பாா்க்கலாம் .

அடிபணிவது என்பது திராவிட ஆட்சியிலும் தற்போது நடைபெற்று வருகின்ற திராவிட மாடல் ஆட்சியிலும் கிடையாது. அனைத்து மதத்துக்கும் சமமான ஆட்சிதான் நமது முதல்வா் தலைமையிலான ஆட்சி.  அதன் அடிப்படையில் தான் தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேச விஷயத்திலும் ஆதீனங்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக முதல்வா் அனுமதி வழங்கியுள்ளாா். 

கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. அதனை தமிழக முதல்வா் வரவேற்கிறாா்.  மகளிருக்கான உரிமைத் தொகை கூடிய விரைவில் வழங்கப்படும். அதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. சொல்வதை செய்வதும் சொல்லாததையும் செய்வதுதான் திமுக ஆட்சி. அந்த வகையில் தோ்தல் அறிக்கையில் கூறியிருந்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →