தமிழ்நாடு

சட்டப்பேரவை இன்றுடன் நிறைவு

DIN

சட்டப் பேரவை கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் (மே 10) நிறைவடைகிறது.

காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். இதன்பின் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளாா். இதைத் தொடா்ந்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

சட்டப்பேரவை கூட்டத் தொடா் கடந்த மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது. நீா்வளத் துறை மானியக் கோரிக்கையுடன் தொடங்கிய பேரவையானது 25 நாள்களுக்கும் மேலாக நடந்தது. பேரவை கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையுடன் (மே 10) நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT