தமிழ்நாடு

புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்

DIN

சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 3 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடந்து வந்தது.

அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு கும்மி மற்றும் ஒயிலாட்டம் ஆட்டம் ஆடும் நிகழ்ச்சி நடந்தது.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகளில் மிக முக்கிய கலையாக  ஒயிலாட்டம் உள்ளது. இளம் தலைமுறையினர் தற்போது ஆர்வமாக இக்கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வமாகி வருகின்றனர். இக்கலையை, ஈரோடு உள்பட கிராமந்தோறும் கொண்டு சேர்க்கும் வகையில், கருமத்தம்பட்டி சங்கமம் ஒயிலாட்ட கலைக்குழு சார்பில் 5 வயது குழந்தைகள் தொங்கி பெரியவர்கள் வரை தொடர்ந்து பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகின்றனர்.

ஒயிலாட்டம் ஆடிய ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்.

இந்நிலையில், ஒயிலாட்ட கலைஞர்களின் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட ஒயிலாட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். 

தமிழகத்தின் பாரம்பரிய கிராமிய ஒயிலாட்ட கலை பயிற்சி பெற்ற குழுவினரின் இசை முழங்க கூடி நின்று ஒயிலாட்டம் நடத்தியது கூடியிருந்தவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. 

கிராமிய கலை குறித்து ஒயிலாட்டம் ஆடி, இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் ஒயிலாட்ட கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல்கள்  இசையுடன் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரை உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இசைக்கு ஏற்றவாறு சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர் வரை ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT