மகனுக்கான தாயின் போராட்டம் வென்றது: குஷ்பு
மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், தனது மகனை விடுவிப்பதற்காக தாயார் அற்புதம்மாள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தினார்.
Advertisement
Advertisement
உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை இது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் இன்று (மே 18) உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.