முகப்பு
தமிழ்நாடு

குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:46 PM
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
பகிர்:

சென்னை: குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் 7.01 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கரோனா முதல் தவனை தடுப்பூசியை 93.76 சதவீதம் பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர்.

ஜூன் 12 ஆம் தேதி ஒரு லட்சம் இடஙகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை. 

இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததில், சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆகவே வந்துள்ளது. குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →