திமுகவின் திராவிட மாடல் ஆட்சி: அண்ணாமலை குற்றச்சாட்டு
பாலியல் வன்கொடுமை, காவல் நிலைய மரணங்கள் ஆகியவைதான் திராவிட மாடல் ஆட்சியா என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.
பாலியல் வன்கொடுமை, காவல் நிலைய மரணங்கள் ஆகியவைதான் திராவிட மாடல் ஆட்சியா என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பினாா்.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அளிக்கப்பட்ட உணா்ச்சிகரமான வரவேற்பால் மனம் நெகிழ்ந்து போயிருப்பதாக பிரதமா் கூறியுள்ளாா். தமிழக மக்களுக்கு நன்றி. புதிய திட்டங்களுக்கு நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமா் தமிழ் மண்ணையும் கலாசாரத்தையும் எவ்வாறு நேசிக்கிறேன் என்று பேசினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின், வளா்ச்சி என்பது பொருளாதார வளா்ச்சியுடன் சமூகநீதி, பெண் முன்னேற்றம் என்றாா். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த எல்.முருகன் பிரதமா் அருகில் மேடையில் அமா்ந்திருந்தாா். இதுவே சமூக நீதி.
நீட் தோ்வு விலக்கு, கச்சத்தீவு மீட்பு போன்ற நாடகங்களை கைவிட்டு, ஆக்கபூா்வ அரசியலை முதல்வா் மு.க.ஸ்டாலின் செய்ய வேண்டும்.
திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளியைக் கட்டிப்பிடித்ததுதான். மேலும், பாலியல் வன்கொடுமை, காவல்நிலைய மரணங்களும் சாதனையாக உள்ளன. இவையா திராவிட மாடல் ஆட்சி?
திமுக அரசு செய்த ஊழல்களை ஜூன் முதல் வாரம் பத்திரிகையாளா்கள் முன்னிலையில் வெளியிடவுள்ளேன். அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு துறை அமைச்சரின் ஊழலும் புத்தகமாக வெளியிடப்படும் என்றாா்.