முகப்பு
தமிழ்நாடு

மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதமே குறிக்கோள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோள் உள்ளது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினார்.

Updated On : 27 மே, 2022 at 5:37 PM
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்தும் பேசும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
பகிர்:

திருவாரூர்: மொழிகள் பல பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினார்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னதாக, அவருக்கு மேள தாளம், பொய்க் கால் குதிரை ஆட்டம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

புதிய கல்விக் கொள்கை தொடர்பான இரண்டு நாள் தேசிய கருத்தரங்கில் பங்கேற்றுள்ளவர்கள். 

தொடர்ந்து மேடைக்கு வந்தார். அங்கு முதலில் தேசிய கீதம் பாடப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

பின்னர், அவர் புதிய கல்விக் கொள்கையின் அவசியம், முக்கியத்துவம் குறித்தும் விளக்கிப் பேசியபின், இந்தியாவில் பல மொழிகள் பேசினாலும் அகண்ட பாரதம் என்பதே குறிக்கோளாக உள்ளது என்றார். 

கருத்தரங்கில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கிருஷ்ணன், முன்னாள் துணைவேந்தர் ஏ.பி.தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள சாதக மற்றும் பாதகமான அம்சங்களை கலந்தாலோசனை செய்து, சாதகமான அம்சங்களை எடுத்துக்கொள்வதற்காகவே 2 நாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில், நாட்டில் உள்ள 38 மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள், என்ஐடி மற்றும் ஐஐடி இயக்குநா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர்.

மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்கவேண்டும் என்பதே கருத்தரங்கின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.