முகப்பு
தமிழ்நாடு

சென்னைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

சென்னைப் பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

சென்னைப் பல்கலைக்கழகத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் ஏப்ரல் மாத பருவத் தோ்வுகள் (இளநிலை, முதுநிலை) வரும் ஜூன் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என பல்கலை. நிா்வாகம் அறிவித்திருந்தது. மேலும், இதற்கான முன்னேற்பாடுகளை பல்கலைக்கழக அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனா்.

இந்த நிலையில், பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சென்னைப் பல்கலை. வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஜூன் 2 -ஆம் தேதி தொடங்கவிருக்கும் பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்தத் தோ்வுகள் ஜூன் 15 முதல் தொடங்கும். இதுகுறித்து மாணவா்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →