சந்திர கிரகணம்: மாசாணியம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது!
சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் நாளை நடை சாத்தப்படுகிறது.
சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வரும் 8-11-2022 (செவ்வாய்க் கிழமை) அன்று பிற்பகல் 2 மணி முதல் நடை சாத்தப்படுகிறது.
மீண்டும் அடுத்த நாள் 9-11-2022 காலை 6 மணி முதல் வழக்கம் போல் நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.