சந்திர கிரகணம்: தஞ்சை பெரியகோவில் நடை சாத்தப்பட்டது
சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் நடை பகல் 12 மணிக்கு சாத்தப்பட்டது.
தஞ்சை: சந்திர கிரகணம் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் நடை பகல் 12 மணிக்கு சாத்தப்பட்டது.
இன்று சந்திர கிரகணம் நடைபெறுவதை ஒட்டி நாடு முழுவதும் உள்ள கோயில்கள் அனைத்தும் சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரத்தில் அடைக்கப்பட்டு பின்பு திறக்கப்படும்.
அதன்படி இன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் பெருவுடையார் சன்னதியில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
கிரகணம் முடிந்து மாலை 7 மணிக்கு கோயில் திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.