கோப்புப்படம் 
தமிழ்நாடு

சீர்காழி அருகே வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

DIN


மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் எருக்கூர் கிராமம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராமன். இவரது மகள் அக்ஷிதா(5) ஞாயிற்றுக்கிழமை மாலை(நவ.13) தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த பெரிய வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவு 10 மணி வரை 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

2014 வாகா தாக்குதல்: 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளும் விடுவிப்பு?

மேயர் தேர்தலில் ஆளும் குடியரசுக் கட்சி படுதோல்வி: “எமது நடவடிக்கைகளே முக்கிய காரணம்!” - டிரம்ப்

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

SCROLL FOR NEXT