தமிழ்நாடு

காட்பாடியில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

DIN

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் இன்று துவங்கியது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிய ஆள் சேர்க்கும் முகாம், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று துவங்கியது. இந்த முகாம் இன்று முதல் வரும் வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
இந்த முகாமில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். சிப்பாய், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்புக்காக இந்த முகாம் நடைபெறுகிறது.

மேலும், பெண் ராணுவக் காவலர்களுக்கான முகாமும் இங்கே நடைபெறுகிறது. இந்த முகாமில் நாளொன்றுக்கு சுமார் 3000 பேர் பங்கேற்கின்றனர்.

ராணுவ வீரர் பணிகளுக்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 வட மாவட்டங்களை சேர்ந்தவர்களும், மற்ற பணிகளுக்கு தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.

இந்த முகாம் நடைபெறுவதை ஒட்டி பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT