தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. மழை குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 21,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,500 கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 15,500 கன அடியாகவும் சரிந்தது.

நீர் வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியிலிருந்து வினாடிக்கு 15,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 37- வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின்  நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT