கோப்புப்படம் 
தமிழ்நாடு

அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்: சென்னை மேயர் அறிவிப்பு

சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

DIN

சென்னையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். 

அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்கள் உணவருந்துவதற்காக அமைக்கப்பட்ட அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனினும், திமுக ஆட்சியில் அதற்கான நிதி சரியாக ஒதுக்கப்படவில்லை, பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை மாமன்றக் கூட்டத்தில், அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாக மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவர் கூறியதையடுத்து பேசிய சென்னை மேயர் பிரியா, 'அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில்தான் இருக்கும். அம்மா உணவகம் தொடங்கியதில் இருந்து எப்படி செயல்பாட்டில் உள்ளதோ இனியும் அவ்வாறே தொடரும். பயன்பாட்டில் இல்லாத அம்மா உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

சென்னை மேயர் பிரியா தலைமையில் நேற்று (நவம்பர் 28 ஆம் தேதி) மாமன்றக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT