கோப்புப்படம் 
தமிழ்நாடு

2023-24-ல் ஐ.டி. நிறுவன ஆள் சேர்ப்பு 20% குறையும்!

2023-24-ம் ஆண்டில் புதிய ஊழியர் சேர்க்கையை 20% குறைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

DIN

2023-24-ம் ஆண்டில் புதிய ஊழியர் சேர்க்கையை 20% குறைக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா, ஐரோப்பியாவில் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டால் இந்திய மென்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

பொருளாதார பின்னடைவை எதிர்பார்த்து புதிதாக ஊழியர்களை பணிக்கு அமர்த்தவதை ஐ.டி. நிறுவனங்கள் குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணினி மென்பொருள்களுக்கான சந்தை இந்த ஆண்டு சிறப்பாக உள்ளபோதிலும் பணியாளர்கள் விலகல் அதிகரித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டில் வளாகத் தேர்வு மூலம் 50,000 பேரை பணியில் சேர்க்க இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் விப்ரோ 30,000 பேரையும், டி.சி.எஸ் புதிதாக 40,000 பேரையும் பணிக்கு அமர்த்த உள்ளன. எச்.சி.எல். டெக்னாலஜீஸ் இவ்வாண்டு 45,000 பேரையும், டெக் மகேந்திரா நிறுவனம் 15,000 பேரையும் பணிக்கு அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.


எனினும் 2023-24 நிதி ஆண்டில், இவ்வாண்டைவிட 20% குறைவாக புதிய பணியாளர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி வசூல் எவ்வளவு? படக்குழு அறிவிப்பு!

அதிவேக அரைசதம் விளாசிய நமீபிய வீரர்; ஜிம்பாப்வேவுக்கு 205 ரன்கள் இலக்கு!

நீ உச்சத்திலேயே இரு! விஜய் மீது சீமான் காட்டம்?

பறவை மோதல்? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

குரூப் 2, 2ஏ தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியீடு!

SCROLL FOR NEXT