தமிழ்நாடு

3 சிறுவர்கள் உயிரிழப்பு: திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

DIN

திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுவதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் சிறுவர்கள் உயிரிழந்த காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் சந்தித்து தெரிவித்ததாவது:

திருப்பூர் சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சிறுவர்கள் பாதுகாப்பு காப்பாளர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும், காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கெட்டுப்போண உணவை தந்ததால், 3 சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மூடப்படுகிறது. காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்தது. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதையாலும், மெத்தன போக்காலும் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும்.

திருப்பூர் சிறார் காப்பகத்தில் உள்ள சிறுவர்கள், அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

SCROLL FOR NEXT