பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல என்று கூறிய பியூஷ் கோயல், தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என்றார்.
சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய அரசு தரமான அரசியை வழங்கினாலும், தரமற்ற அரிசியை மாநில அரசு விநியோகிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிக்க | ரேசன் கடையை பார்க்காமலேயே பொருள்கள் தரமில்லை என்பதா? பியூஷ் கோயலுக்கு அமைச்சா் அர.சக்கரபாணி பதில்
மத்திய அரசின் திட்டங்களால் தமிழக மக்கள் பயனடைந்தாலும், ஆட்சியில் உள்ள அரசு அதனை மறைக்க பார்க்கிறது.
பாஜக குடும்ப ஆட்சி செய்யும் கட்சி அல்ல, தமிழகத்தில் இருந்து குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும் என பியூஷ் கோயல் கூறினார்.