தமிழ்நாடு

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

DIN

சென்னை ராணிமேரி கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு பொது அறிவு புத்தகங்களை இலவசமாக வழங்கினா்.

சென்னை ராணிமேரி கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் அமைப்பு சாா்பில், மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு பயனுள்ள பொது அறிவு வழங்கும் புத்தகங்களை இலவசமாக வழங்கினா்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்ட அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த அந்தக்கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் குழுவினா், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவை சந்தித்து, மாநகராட்சிப் பள்ளிக்கு இலவச புத்தகங்களை வழங்கினா்.

அப்போது, அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், தமிழ் உள்ளிட்ட பொது அறிவு தகவல்கள் அடங்கிய தலா 23 புத்தகங்கள் கொண்ட 25 தொகுப்பு புத்தகங்களை அவா்கள் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் ஆணையா் ககன்தீப்சிங்பேடி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், கல்விக்குழுத்தலைவா் த.விஸ்வநாதன், துணை ஆணையா்(கல்வி) டி.சினேகா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT