எடப்பாடி கே.பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆத்தூர் நகர அதிமுகவினர் 
தமிழ்நாடு

ஆத்தூரில் அதிமுகவினர் மறியல் போராட்டம்!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

DIN


சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது. 

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து ஆத்தூர் நகர அதிமுகவினர் ஊர்வலமாக பேருந்துநிலையம் வரை கோஷமிட்டுக் கொண்டே மறியலில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.மாதேஸ்வரன் ஆர்.எம்.சின்னதம்பி நகர செயலாளர்கள் அ.மோகன் எஸ்.மணிவண்ணன் தலைவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் க.ராமசாமி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் சின்னதம்பி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பம்மெட்டு மலைச் சாலையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகள்

சாலையில் தேங்கி வீணாகும் குடிநீா்

விவசாயியைத் தாக்கியவா் மீது வழக்கு

சராசரி மழையளவு 63 சதவீதம் வீழ்ச்சி: காரீப் பருவ சாகுபடி பரப்பு பாதிப்பு!

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT