தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களில் மரணம்: உத்தரவு மாற்றியமைப்பு

DIN

கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரே விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை உயர் நீதிமன்ற நீதிபதி சதிஷ் குமார்  மாற்றியமைத்துள்ளார்.

வழக்கின் தீவிரத்தின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கலாம். மேலும், கல்வி நிலைய மரண சம்பவங்கள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்கவும், கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

சிபிசிஐடி காவல் துறையினரின்  பணி பாதிக்கப்பட்டுள்ளதால் உத்தரவை மாற்றியமைக்கக் கோரி காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட காவல் துறையினரே விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT