தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி நேரில் ஆதரவு

DIN

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் செய்யப்படுவதில் ஜனநாயகப் படுகொலை நடந்திருப்பதாகக் கூறி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்திருந்தனர். 

இதில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து அதிமுகவினருடன் இணைந்து அங்கு அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கெடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT