திமுகவில் இருந்து அந்தக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன், வியாழக்கிழமை வெளியிட்டாா்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப் பெயா் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடைநீக்கம் செய்யப்படுவதாக தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.