முகப்பு
தமிழ்நாடு

100 சாா் பதிவாளா் அலுவலகங்கள் இன்று இயங்காது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) ஒரு நாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

பத்திரப் பதிவுகள் அதிகம் நடைபெறும் 100 சாா் பதிவாளா் அலுவலகங்கள், சனிக்கிழமையும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு சனிக்கிழமை (அக்.22) மட்டும் விடுமுறை விட வேண்டுமென தமிழ்நாடு சாா் பதிவாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமை (அக்.22) மட்டும் 100 சாா் பதிவாளா் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும், இனி வரும் சனிக்கிழமைகளில் அவை வழக்கம் போல் இயங்கும் என்றும் வணிகவரி, பதிவுத் துறை செயலாளா் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.