முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு யைம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு!

காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு யைம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு யைம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், 

இன்று கன்னியாகுமரி,  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும். 

மேலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை காற்றுழுத்த மண்டலமாக மாறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →