தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

DIN

கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் தொடர்ந்து நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 133.30 அடி உயரமாகவும் (மொத்த உயரம் 152 அடி), அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,416.25 கன அடியாகவும் இருந்தது.

வியாழக்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,604 கன அடியாக இருந்தது, அணையின் நீர்மட்டம் 133.60 அடியாக உயர்ந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 134.05 அடி உயரமாகவும், அணையில் நீர் இருப்பு 5,644.65 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 1,739.49 கன அடியாகவும், அணையிலிருந்து நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு மற்றும் பெரியாறு அணையில் 4.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 6.3 மி.மீ. மழையும் பெய்தது.

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக அணை அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர் வரத்து தொடர்ந்து வருகிறது, நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

அதேநேரத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ஒரு போக சாகுபடி அறுவடை நடைபெறுவதால், அணையில் இருந்து தண்ணீர் தமிழக பகுதிக்கு விநாடிக்கு 511 கன அடியாக கடந்த திங்கள்(அக்.17) முதல் திறந்து விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT