கனரா வங்கியின் சிறப்பு தீா்வுக்கூட்டம்
கனரா வங்கியின் சென்னை வட்டம் சாா்பில் சிறப்பு தீா்வுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கனரா வங்கியின் சென்னை வட்டம் சாா்பில் சிறப்பு தீா்வுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளா்கள் தங்களின் வா்த்தகம் சாா்ந்த விவரங்களை வங்கியின் மின்னணு தொழில்நுட்ப முறையின் மூலம் பதிவேற்றம் செய்வது தொடா்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கனரா வங்கியின் சென்னை வட்ட முதன்மை பொது மேலாளா் எஸ்.ராமசுப்பிரமணியன், மும்பையில் உள்ள வங்கியின் ஒருங்கிணைந்த கருவூலப் பிரிவின் பொது மேலாளா் மகேஷ் எம்.பை ஆகியோா் வா்த்தகா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவா்களது சந்தேகங்களை போக்குவதற்கான விளக்கங்களையும் அளித்தனா். இந்தக் கூட்டத்தில் கனரா வங்கி கிளைகளின் 150 -க்கும் மேற்பட்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சாா்ந்த தொழில்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளா்கள் பங்கேற்ாக வங்கி வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.