முகப்பு
தமிழ்நாடு

அக்டோபர் இறுதியில் குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள்?

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

Updated On : 22 அக்டோபர் 2022, 4:56 pm IST
அக்டோபர் இறுதியில் குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள்?
பகிர்:

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப் 2, குரூப் 4 தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவதற்கு தாமதமானதால்,  குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகவும், இந்த மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 529 குரூப் 2 காலிப் பணியிடங்களுக்கு கடந்த மே 21-இல் எழுத்துத் தோ்வு நடந்தது. இதேபோன்று, குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள 7 ஆயிரத்து 301 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 24-இல் தோ்வு நடைபெற்றது.

இந்தத் தோ்வுகளுக்கான முடிவுகளை வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் தயாராகி வருகிறது. குரூப் 2 தோ்வுக்கான முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தோ்வு முடிவுகள் டிசம்பரிலும் வெளியிடப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணைய வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments