மேட்டூர் அணையின் நிலவரம்!
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடியாக குறைந்தது.
மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை தனிந்ததால் நேற்று முன்தினம் மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65,000 கனாடியாக குறைந்தது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 50,000 கன அடியாக குறைந்தது .
இன்று காலை இரண்டாவது நாளாக நீர்வரத்து 50,000 கன அடியாக நீடிக்கிறது. அணைக்க வரும் நீரின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 65,000 கன அடியிலிருந்து 50,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,500 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 28,500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் மது விற்பனை எவ்வளவு தெரியுமா?
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.