நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தை பெற்றதில் விதிமீறல்? நாளை அறிக்கை வெளியாகிறது
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரத்தில் நாளை (அக்.26) மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் அறிவித்துள்ளார்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டைக் குழந்தை விவகாரத்தில் நாளை (அக்.26) மாலை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அது தொடர்பாக நாளை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
மருத்துவத் துறை அதிகாரிகள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அமபலமாகியுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்
மருத்துவமனை விளக்கத்தை பொறுத்து நயன்தாரா- விக்னேஷ் சிவனிடம் விளக்கம் பெற்று அறிக்கை வெளியாகும் என மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.