சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கடந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படிக்க.. ஏன் குரங்குகளைப் போல தாவி வருகிறீர்கள்? செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிய அண்ணாமலை (விடியோ)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 16,888 சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 2.8 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா மாநகரப் பேருந்துகளில் கடந்த செப்டம்பர் வரை 173 கோடி முறை பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.