தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் சென்னையில் அளித்த பேட்டியில், 

தமிழகத்தில் அக்.29 வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

சித்ரங் புயல் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் இந்தாண்டு தாமதம் ஏற்பட்டுள்ளது. 

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 4-ம் தேதி வரை படிப்படியாக மழை அதிகரிக்கும்.

தென்மேற்கு பருவ மழை இந்தாண்டு இயல்பை விட 45 சதவீதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை எம்.என்.ராஜம், இயக்குநா் எஸ்.பி.முத்துராமனுக்கு சிறப்பு விருது: முதல்வா் அறிவிப்பு

கறிக்கோழிக்கான விலையை அரசே நிா்ணயம் செய்ய வலியுறுத்தல்

திருவொற்றியூரில் ரூ.5 கோடியில் புதிய மீன்பிடித்தளம்

கரூா் சம்பவம்: 2 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மது குடித்த தகராறில் கட்டடத் தொழிலாளி கொலை

SCROLL FOR NEXT