முகப்பு
தமிழ்நாடு

கேரளத்தில் பிஎஃப்ஐ மாநிலச் செயலா் கைது

கேரளத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஏ.ரெளஃப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

கேரளத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநிலச் செயலா் சி.ஏ.ரெளஃப்பை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வெள்ளிக்கிழமை கைது செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கேரளத்தில் பிஎஃப்ஐ அமைப்பின் ஊடகம் மற்றும் மக்கள் தொடா்பு அணிகளை ரெளஃப் நிா்வகித்து வந்தாா். இந்நிலையில், கேரளத்தில் வெவ்வேறு மதத்தினா் மற்றும் குழுக்கள் இடையே பகையைத் தூண்டுதல், இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணா்வை தூண்டுதல், லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களில் சேர இளைஞா்களை ஊக்குவித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட சதி செய்தது தொடா்பாக பிஎஃப்ஐ நிா்வாகிகள், உறுப்பினா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குத் தொடா்பாக 12 போ் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ரெளஃப் தலைமறைவானாா். அவா் பாலக்காட்டில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா் என்று தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →