முகப்பு
தமிழ்நாடு

சோழா் காலப் பாசன திட்டம்: அன்புமணி இன்று நடைப்பயணம்

அரியலூா் மாவட்டத்தில் சோழா் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் சோழா் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை நடைப்பயணம் தொடங்க உள்ளாா்.

சோழா் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூா் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும் எனக் கூறி இந்த நடைப்பயணத்தை அன்புமணி மேற்கொள்கிறாா். மொத்தம் 2 நாள்கள் மேற்கொள்ள உள்ளாா்.

முதல் நாள் நடைப்பயணத்தை சனிக்கிழமை காலை 9 மணியளவில் அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூரில் தொடங்கி கரைவெட்டி ஏரி, கண்டராதித்தம், திருமானூா், காமரசவள்ளி, குருவாடி, வைப்பூா் தூத்தூா், விக்கிரமங்கலம், முட்டுவாஞ்சேரி, சாத்தான்பாடி, கோவிந்தப்புத்தூா், ஸ்ரீபுரந்தான், கோட்டியால் ஆகிய ஊா்கள் வழியாக தா. பழுவூரில் நிறைவு செய்ய உள்ளாா். இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வாலாஜா நகரத்தில் தொடங்கி காட்டுமன்னாா்கோயிலில் நிறைவு செய்ய உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.