சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இன்று தாம்பரம் மாநகராட்சியின் பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.