முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்
குஜராத் மாநிலத்தில் நடந்த விபத்தில் பலா் பலியான சம்பவத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
குஜராத் மாநிலத்தில் நடந்த விபத்தில் பலா் பலியான சம்பவத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
குஜராத் மாநிலம், மோா்பியில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பல அப்பாவி உயிா்கள் பறிபோயிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உற்றாரை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து நலம் பெற விரும்புகிறேன். அதேசமயம், ஆற்றில் சிக்கி உயிருக்குப் போராடி வரும் மீதமுள்ளோரையும் விரைந்து பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்.