தேவர் ஜெயந்தியையொட்டி மதுரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழா பசும்பொன்னில் கோலாகலமாகத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மதுரை கோரிபாளையத்தில் உள்ள முத்துராமலிங்கரின் சிலைக்கு திமுக சார்பில் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியசாமி, அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்திலுள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.
முத்துராமலிங்க தேவர் குருபூஜையையொட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் நகருக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.