முகப்பு
தமிழ்நாடு

நவம்பர் 6ல் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி: டிஜிபி அறிவுறுத்தல்!

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி அளித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:42 AM
பகிர்:

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். 

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. 

பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதன்படி, நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு அந்தந்த மாவட்ட காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →