முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சென்னை விமான நிலையத்தில் ரூ.59.70 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத்தகவலின் படி, கடந்த 22ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூரைச் சேர்ந்த 2 ஆண் பயணிகளிடம் சோதனை நடத்திய போது ரூ.59.70 லட்சம் மதிப்புள்ள 1.281 கிலோகிராம் தங்கம், ரூ.4.86 லட்சம் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தங்கத்தை இவர்கள் பசை வடிவில் ஆசனவாயில் மறைத்து கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு சோதனையின் போது, இலங்கையைச் சேர்ந்த ஒரு பயணியிடமிருந்து ரூ.23.13 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த கற்கள் கைப்பற்றப்பட்டது. இவற்றை சுங்கத்துறையினர் கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →