முகப்பு
தமிழ்நாடு

ஓணம் பண்டிகை: செப்.8-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

Updated On : 3 செப்டம்பர், 2022 at 4:56 PM
கோப்புப் படம்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:43 PM

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 8ஆம் தேதி வழங்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக செப்டம்பர் 10ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மலையாள மொழி பேசும் மக்களால் கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளத்தின் அருகேயுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படும். 

இப்பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஆக. 30) தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.