திருநெல்வேலி: திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் தினமணியில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டத்தில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவேண்டும் என தினமணி பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இங்கே கிளிக் செய்யவும்: நெல்லை மாவட்ட மக்களின் தேவைகளும், எதிா்பாா்ப்புகளும்!
அதை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அது தொடர்பாக அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தேன். அதன்படி, மணிமுத்தாறில் ரூ. 7 கோடியில் பல்லுயிர் பெருக்கம் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். களக்காடு பகுதியில் வாழைத்தார் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.