கோப்புப்படம் 
தமிழ்நாடு

செம்மண் கடத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது!

செம்மண் கடத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

கிருஷ்ணகிரி: செம்மண் கடத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் துறையினர்,  கொண்டப்பநாயனப்பள்ளி கிராமம் அருகே, ஆவல்நத்தம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி செய்தபோது,  லாரியில் சட்டவிரோதமாக செம்மண் கடத்துவது தெரியவந்தது.  இதையடுத்து,  அந்த லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர்,  அதன் ஓட்டுநர் ஜிங்களூர் கிராமத்தை சேர்ந்த சர்தார் பாஷா (36), என்பது தெரியவந்தது.  

தொடர்ந்து ஓட்டுநரிடம்  மேற்கொண்ட விசாரணையில், இந்த குற்றச் சம்பவத்தில் சின்ன மனவராணப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் பாதுஷா(54)-க்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து டிப்பர் லாரி ஓட்டுநர் சர்தார் பாஷா,  ஊராட்சி மன்ற தலைவர் பாதுஷா ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட பாதுஷா  வேப்பனப்பள்ளி அதிமுக சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

காட்சிக்குப் பின்னால்... நித்யா மெனன்!

Return-தான்! Reject இல்ல! மெட்ரோ நிராகரிப்பு திட்டமிட்ட சதி! : நயினார் நாகேந்திரன் | BJP | DMK

பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்துக்கு செல்லவே தேவையில்லை: அணி உரிமையாளர்

SCROLL FOR NEXT