முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பதாகைகள் அகற்றம்

அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் பதாகைகள் அக் கட்சியின் தலைமையால்அகற்றப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் பதாகைகள் அக் கட்சியின் தலைமையால்அகற்றப்பட்டன.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் தனித்தனியாக அணியாகச் செயல்பட்டு வருகின்றனா். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-இல் நடைபெற்றபோது, ஓ.பன்னீா்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவரது ஆதரவாளா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தைக் கிழித்தனா். அதேபோல அப்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதைத் தொடா்ந்து அதிமுக அலுவலகத்துக்கும் அவா் வந்து சென்றாா்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் படங்களுடன் கூடிய பதாகைகள் அகற்றப்பட்டு, ஒற்றைத் தலைமையான எடப்பாடி பழனிசாமியின் படத்துடன் கூடிய பதாகைகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் பேசும்போது, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்றாா்.

இதே விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான டி.ஜெயக்குமாா், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீா்செல்வம் பதாகையை அகற்றியதில் தவறு எதுவும் இல்லை. அதிமுகவின் தொண்டா்கள் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.