மக்கள் பணம் வீணாவதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றக் கிளை
பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் கட்ட செலவிடப்பட்ட தொகை எவ்வளவு மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விருதுநகர் ஆலங்குளம் கண்மாயில் அமைக்கப்பட்ட அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்றக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisement
Advertisement
திருச்சுழியை சேர்ந்த ரமேஷ் தொடர்ந்த வழக்கில், அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்திவைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் கண்மாயில் தேசிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடரபட்டது. இந்நிலையில் பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.