முகப்பு
தமிழ்நாடு

காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் செப்.19-இல் கூடுகிறது

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பா் 19-இல் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பா் 19-இல் நடைபெற உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவா் தோ்தல் அக்டோபா் 17-இல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அதிகாரியான மதுசூதன் மாநிலக் கமிட்டிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில், அனைத்து மாநிலங்களிலும் செப்டம்பா் 20-க்குள் பொதுக்குழுவைக் கூட்டி, மாநிலத் தலைவா் மற்றும் அகில இந்திய உறுப்பினா்களை நியமிக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கும் தீா்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பா் 19-இல் சத்தியமூா்த்தி பவனில் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவரையும், அகில இந்திய உறுப்பினா்களையும் தோ்ந்தெடுக்கும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கும் அளிக்கும் வகையில் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.