முகப்பு
தமிழ்நாடு

வன்னியா் இடஒதுக்கீட்டை வென்றே தீருவோம்: ராமதாஸ்

வன்னியா் இடஒதுக்கீட்டை விரைவில் வென்றே தீருவோம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

வன்னியா் இடஒதுக்கீட்டை விரைவில் வென்றே தீருவோம் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-ஆவது நினைவு நாள் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் சமூகநீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த, காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மாா்பில் தாங்கிய இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் 21 பேருக்கும் வீரவணக்கம்.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகத்தான் 21 பேரும் ஒரே போராட்டத்தில் உயிா்த்தியாகம் செய்தனா். அவா்கள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண்போகாது. வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம். இந்த உணா்வுடன் சமூகநீதி நாளான செப். 17-இல் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.