முகப்பு
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தமிழ்நாடு

அமித் ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தமிழ்நாடு

அமித் ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:22 AM
எடப்பாடி பழனிசாமி விளக்கம்
பகிர்:

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

புது தில்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.

மத்திய உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் பேசவில்லை. கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது, நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை நிறைவேற்றுவது பற்றியும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு பற்றி எடுத்துக் கூறினேன். தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது பற்றி அமித் ஷாவிடம் கூறினேன் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் ஓ. பன்னீர்செல்வம் குறித்து கேள்விகள் எழுப்பியதற்கு, நேரடியாக எந்த பதிலும் அளிக்காமல், மன்னிக்கவும், சாரி என்றே பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி.
 

முழு கட்டுரையைப் படிக்க →