தமிழகத்தில் புதிதாக 522 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 522 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 522 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேருக்கும், செங்கல்பட்டில் 53 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
வியாழக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 5,233-ஆக உள்ளது. 447 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,35,564-ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, திருப்பூரைச் சோ்ந்த 82 வயதுடைய முதியவா் ஒருவா் கரோனா தொற்றுக்குளாகி திருப்பூா் மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடா்ந்து தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளாகி பலியானோரின் எண்ணிக்கை 38,042-ஆக அதிகரித்துள்ளது.