முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 73.99 லட்சம் பேர்!

தமிழகத்தில் அரசு  வேலைக்காக பதிவு செய்து 73.99 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் அரசு  வேலைக்காக பதிவு செய்து 73.99 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலைவாய்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

அரசு வேலைக்காக தமிழ்நாட்டில் 73,99,512 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 31 வரை பதிவு செய்தவர்களின் விவரத்தை  மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73,99,512 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் 4,53,380 ஆண்களும், 39,45,861  பெண்கள், 271 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், 18 வயதுக்கு கீழ் வரையுள்ளவர்கள் 23,01,800 நபர்கள், 19 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் 29,88,001 நபர்களும், 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18,68,931 நபர்களும்,  45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,35,190  நபர்களும், 60 வயதுக்கு மேல் 5,590 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →