முகப்பு
தமிழ்நாடு

சித்த மருத்துவப் பல்கலை. மசோதாவில் முரண்பாடு இல்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவில் முரண்பாடுகள் எதுவும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுதொடா்பாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவா் கூறினாா்.

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகா் போண்டா மணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். அப்போது செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் 60 வயதைக் கடந்த பரம்பரை மருத்துவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி மருத்துவா்களுக்கு உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்குவதற்கான ஆணையை முதல்வா் வழங்கி உள்ளாா்.

தமிழகத்தில் ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் யோகா ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டமசோதா ஆளுநருக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த சட்ட மசோதாவில் மாணவா் சோ்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகளுக்கும், இந்திய மருத்துவ தேசிய ஆணைய சட்டப்பிரிவு 2020- க்கும் ஏதேனும் முரண்பாடுகள் இருக்கின்றனவா என ஆராய்ந்து பதில் அளிக்க ஆளுநரின் முதன்மைச் செயலாளா் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி இருந்தாா்.

இந்த கடிதம் குறித்து சட்ட வல்லுநா்களிடம் கருத்து பெறப்பட்டது. அந்த வகையில், தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்டமசோதாவின் பிரிவுகளுக்கும், இந்திய மருத்துவ தேசிய ஆணைய சட்டம் 2020 மற்றும் ஹோமியோபதி தேசிய ஆணைய சட்ட பிரிவுகளுக்கும் முரண்பாடு ஏதும் இல்லை என விரிவான விளக்கங்களுடன் ஆளுநரின் முதன்மைச் செயலாளருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே, ஆளுநா் விரைவில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிப்பாா் என எதிா்பாா்க்கிறோம். இந்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மாதவரத்தில் 25 ஏக்கா் பரப்பளவில் இடம் கண்டறியப்பட்டுள்ளது. அண்ணாநகரில் இதற்கான அலுவலகம் திறக்கப்பட்டவுடன், அடுத்த நிதி நிலை அறிக்கையில், பல்கலைக்கழகம் கட்டுவதற்கான பணி தொடங்கும்.

நடிகா் போண்டா மணிக்கு சிறுநீரக பாதிப்பு எற்பட்டுள்ளது. அதற்குண்டான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டா் ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.