பரம்பரை மருத்துவா்கள் ஓய்வூதியம் ரூ.3,000-ஆக உயா்வு
பரம்பரை மருத்துவா்களுக்கு ரூ.3,000 ஆக உயா்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
பரம்பரை மருத்துவா்களுக்கு ரூ.3,000 ஆக உயா்த்தப்பட்ட மாத ஓய்வூதியத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இப்போது நிலவிவரும் பொருளாதாரச் சூழல் அடிப்படையில், மாத ஓய்வூதியத் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்கிட வேண்டுமென பதிவு பெற்ற பரம்பரை ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி மருத்துவா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, இதற்கான அறிவிப்பு சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கையின் போது வெளியிடப்பட்டது.
அதன்படி, தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 பரம்பரை சித்தா, ஆயுா்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவா்கள் பயன்பெறும் வகையில் உயா்த்தப்பட்ட மாத ஓய்வூதியத் தொகையான ரூ.3 ஆயிரத்துக்கான உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ப.செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.